சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
1.134
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கருத்தன், கடவுள், கனல் ஏந்தி பண் - மேகராகக்குறிஞ்சி (திருப்பறியலூர் (பரசலூர்) திருவீரட்டம் ) Audio: https://www.youtube.com/watch?v=zlaSEA7kXxw |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.134  
கருத்தன், கடவுள், கனல் ஏந்தி
பண் - மேகராகக்குறிஞ்சி (திருத்தலம் திருப்பறியலூர் (பரசலூர்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவீரட்டம் திருவடிகள் போற்றி )
கருத்தன், கடவுள், கனல் ஏந்தி ஆடும் நிருத்தன், சடைமேல் நிரம்பா மதியன்- திருத்தம் உடையார் திருப் பறியலூரில், விருத்தன் எனத் தகும் வீரட்டத்தானே. | [1] |
மருந்தன், அமுதன், மயானத்துள் மைந்தன், பெருந்தண்புனல் சென்னி வைத்த பெருமான்- திருந்து மறையோர் திருப் பறியலூரில், விரிந்த மலர்ச்சோலை வீரட்டத்தானே. | [2] |
குளிர்ந்து ஆர் சடையன், கொடுஞ்சிலை வில் காமன் விளிந்தான் அடங்க வீந்து எய்தச் செற்றான்- தெளிந்தார் மறையோர் திருப் பறியலூரில், மிளிர்ந்து ஆர் மலர்ச்சோலை வீரட்டத்தானே. | [3] |
பிறப்பு ஆதி இல்லான், பிறப்பார் பிறப்புச் செறப்பு ஆதி அந்தம் செலச் செய்யும் தேசன்- சிறப்பாடு உடையார் திருப் பறியலூரில், விறல் பாரிடம் சூழ, வீரட்டத்தானே. | [4] |
கரிந்தார் இடுகாட்டில் ஆடும் கபாலி, புரிந்தார் படுதம் புறங்காட்டில் ஆடும் தெரிந்தார் மறையோர் திருப் பறியலூரில், விரிந்து ஆர் மலர்ச்சோலை வீரட்டத்தானே. | [5] |
அரவு உற்ற நாணா, அனல் அம்பு அது ஆக, செரு உற்றவர் புரம் தீ எழச் செற்றான்- தெருவில் கொடி சூழ் திருப் பறியலூரில், வெரு உற்றவர் தொழும் வீரட்டத்தானே. | [6] |
நரை ஆர் விடையான், நலம் கொள் பெருமான், அரை ஆர் அரவம் அழகா அசைத்தான்- திரை ஆர் புனல் சூழ் திருப் பறியலூரில், விரை ஆர் மலர்ச்சோலை வீரட்டத்தானே. | [7] |
வளைக்கும் எயிற்றின் அரக்கன் வரைக்கீழ் இளைக்கும்படி தான் இருந்து, ஏழை அன்னம் திளைக்கும் படுகர்த் திருப் பறியலூரில், விளைக்கும் வயல் சூழ்ந்த வீரட்டத்தானே. | [8] |
வளம் கொள் மலர்மேல் அயன், ஓதவண்ணன், துளங்கும் மனத்தார் தொழ, தழல் ஆய் நின்றான்- இளங்கொம்பு அனாளோடு இணைந்தும் பிணைந்தும் விளங்கும் திருப் பறியல் வீரட்டத்தானே. | [9] |
சடையன்; பிறையன்; சமண் சாக்கியரோடு அடை அன்பு இலாதான்; அடியார் பெருமான்; உடையன், புலியின் உரி-தோல் அரைமேல்; விடையன்-திருப் பறியல் வீரட்டத்தானே. | [10] |
நறு நீர் உகும் காழி ஞானசம்பந்தன், வெறி நீர்த் திருப் பறியல் வீரட்டத்தானை, பொறி நீடு அரவன், புனை பாடல் வல்லார்க்கு அறும், நீடு அவலம்; அறும், பிறப்புத்தானே. | [11] |